Pages

Tuesday, February 23, 2010

பிப் 26--கெளதம் மேனன் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

விண்ணை தாண்டி வருவாயா :


காதல்:
 அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது நம்ம  science . உயிர்சமூகம் ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது.



முரண்பாடு :
காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம் என்கிறார்கள் சிலர். அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள் என்கிறார்கள் வேறு சிலர். 
இது எல்லாம் ஒரு புறமிருக்க காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது"\ என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் சிலர் .
என்னை  பொறுத்தவரை  நவீன காதல்(maximum) உள்ளத்தைவிட உடற்கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருக்கின்றது.
காதலைப்பற்றிப் பேசாத கவிஞர்களும் குறைவு, காதல் வசப்படாத மனிதர்களும் குறைவு.சரி  விண்ணை தாண்டி வருவாயா - ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யுமா ?
கதை:


உதவிஇயக்குனர் கார்த்திக் கேரளாவிலிருந்துவரும்இளம்பெண்ணுடன்காதல்கொள்வதும் அதனால்வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான்படத்தின்கதை. 

கார்த்திக்  என்ற  உதவி    இயக்குனராக  சிம்பு நடித்துள்ளார். 
மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்‌ரிஷா.
படத்தின் பாடல்களை முதலில்  லண்டனில் வெளிஇட்டார்கள் .75 ஆண்டுகால தமிழ்த்திரையுலகில் இது முதல் முறை. நிஜமாகவே பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.என்னுடைய  விருப்ப பாடல் - ஆரோமலே .

 படத்தின்கிளைமாக்ஸைநியூயார்க் நக‌ரில எடுத்துள்ளனர். இதில் உண்மையாகவே சிம்பு அழுதாராம் (without glycerin) .படம்  பார்த்துவிட்டு வரும் போது   மனம் கணக்கும் என்கிறார்  கெளதம் வாசுதேவ்  மேனன் .

கெளதம் மேனன் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்வாரா ?

நான் கெளதம் மேனனின் - காதல் காட்சிகளுக்கு  தீவிர விசிறி ( மின்னலே, காக்க காக்க(butterfly music scene), வாரணம் ஆயிரம் ( train)).காதல் காட்சிகளுக்கு கெளதம் மேனன்  கைதேர்ந்தவர் எனலாம். நானும் என் நண்பர்களும்  பச்சைக்கிளி முத்துசரம்  முதல் காட்சி  கமலா தியேட்டரில் 
பார்த்தோம் - கெளதம் மேனனுக்காக...மிகுந்த ஏமாற்றம்.  i like dad .அதனால் வாரணம் ஆயிரம் .ok.
நான் எதிர்பார்த்த திரைபடகளான கந்தசாமி, ஆயிரத்தில் ஒருவன் , கோவா ,  my name is khan   ஏமாற்றத்தையே  தந்தன . இத்திரைப்படமாவது  ரசிகர்க.ளின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யுமா? பிப்  26 இல்  பார்ப்போம்.
இத்திரைப்படம் தெலுங்கில்ye maaya chesaave (ரீமேக் ) என்கிற  பெயரில் நாக அர்ஜுனின்  மகன் சைதன்யா நடிக்கிறார் .
 

 






 



No comments:

Post a Comment